Description
தமிழ்நாட்டின் மாபெரும் கேளிக்கையாக மாறிவிட்ட சினிமாவைப் பற்றிய வெங்கட் சாமிநாதனின் பார்வை மிக முக்கியமானது. 1961 இல் பதேர் பாஞ்சாலியை சென்னை பிராட்வேயில் திரையிட்ட போது,அந்தப் படத்தை பார்க்க அதிகபட்சம் 20 பேர் வரை கூடியிருப்பார்கள் என்று ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்தும் இன்னமும் அதே நிலைதான் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.
தமிழில் வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள், தொடர்ச்சியாக சினிமாவின் வடிவம், அழகியல் பற்றி எழுதியும், அத்தகைய படங்களை தங்களுடைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கிடையே நல்ல சினிமா பற்றிய புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டுருக்கிறார்கள்.
தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற வெங்கட் சாமிநாதனின் இந்த கட்டுரைகள், தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான அதிர்வுகலை ஏற்படுத்தக் கூடியது.
Reviews
There are no reviews yet.