Description
நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றவில்லை. பண்பாட்டு மரபைச் சிதைக்கவில்லை. நிறைய வரலாறு / மரபு குறித்து பேசினாலும் சமகால நாவல். சம காலத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளின் முடிச்சுகளைத் தேடிய கலைப் பயணம். நாடகக் காதல் என்று சொல்லி ஆவணக்கொலைகள் செய்கிறார்கள் இல்லையா? இதில் நான் சில காதல் நாடகங்களை உருவாக்கி அதன் மரபான வேர்களைத் தொட்டிருக்கிறேன். பிறந்த மதத்துக்கு திரும்புதல் என்கிறார்கள். பிறப்பில் மதம் எங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறேன். ஆனால் இவற்றை நாவலில் வலைபோட்டு தேடினாலும் சிக்காது. அது உங்கள் உணர்வுகளுக்கு மட்டுமே விடப்பட்டுள்ள சவால். மற்றபடி, நாவல், ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ குறித்து மட்டுமே பிரஸ்தாபிக்கிறது. இதில் கொலையாளிகளே விசாரணை அதிகாரிகளாக உள்ளனர்.
தமிழில் வெளியாகியுள்ள சமகால நாவல்களில் புதிய இளைஞர்களின் கவனம் ஈர்த்த படைப்பு.
Reviews
There are no reviews yet.