Description
கட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என: நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும் ஒரு பகுதி மக்களின் வாழ்வை அவர்கள் வட்டாரத்து மொழியில் அத்தாங்கு நாவல் பேசுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் வசிப்பதற்காக கிளாலியையொட்டி புலிகளினால் அமைக்கப்பட்ட ‘பண்டிதர் குடியிருப்பு’ எனும் மாதிரிக் கிராமத்துக்குள் வாழும் மனிதர்களின் பாடுகளை விபரிக்கும் நாவல் சுயவிசாரணைத் தேடலையும், தர்க்க ரீதியான தத்துவ விளக்கங்களையும், கனதியான சொல்லாடல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை நாவலை மேலும் பெறுமதியாக்குகின்றது.
Reviews
There are no reviews yet.