செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் நமக்குள் ஒழித்து வைத்துக் கொண்டிருப்பவை. அவரது பாத்திரங்கள் அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின் தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒரு போதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சியின் போது அவை கசிய விடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைக்குள்ளாகிப் பீற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்து விடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்து கொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெது வெதுப்பான சொற்களால் வசிப்பனுவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் நமக்குள் ஒழித்து வைத்துக் கொண்டிருப்பவை. அவரது பாத்திரங்கள் அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின் தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒரு போதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சியின் போது அவை கசிய விடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைக்குள்ளாகிப் பீற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்து விடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்து கொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெது வெதுப்பான சொற்களால் வசிப்பனுவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
× The product has been added to your shopping cart.