ஐம்பது ஆண்டுகள். பதினைந்தாயிரம் பாடல்கள். எம்.ஜி.ஆர்.-சிவாஜிகணேசன், ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு என்று பல தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் தீட்டிய ஒரே தமிழ்க் கவிஞர் வாலி மட்டுமே.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அக்டோபர் 29, 1931-ம் ஆண்டில் பிறந்த வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் . இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பெயர் பொன்னம்மாள். வாலியின் மனைவியின் பெயர் ரமணதிலகம் .
வாலி இவரை காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார். ரமணதிலகம் ஏற்கெனவே மரணமடைந்து விட்டார். வாலி-ரமணதிலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.