புயலிலே ஒரு தோணி - இரண்டாம் உலகப் போர் பின்னணியில் எழுதப்பட்டுள்ள நவீன தமிழ் இலக்கியப் புதினம், வரலாற்றை மாற்றாமல், அந்த வரலாற்றினூடே தன் கதாபாத்திரங்களை உலவ விட்டு, போர்க்கள அனுபவங்களை துல்லியமாகவும், நம்பகமாகவும் பதிவு செய்திருக்கிறார் ப.சிங்காரம்.
பல நாடுகளில் கதைக்களன், பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் என்று கதை நகர்ந்தாலும், படைப்பு மொழி, நவீன உரைநடையில் வெகு சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. தமிழில் எந்த எழுத்தாளரும் தொடாத உயரத்தைத் தொட்டு ப.சிங்காரம் தனித்துவத்துடன் சாதனை படைத்திருக்கிறார்.
புதிய களம், காணாத காலம், அறியாத கதாபாத்திரங்கள் - இப்படி ஒரு பிரம்மாண்டமான கேன்வாஸில் இந்த புதினத்தை தீட்டியிருக்கிறார். ப.சிங்காரம் கதையின் ஊடே பல்வேறு கதைக்கருக்கள், அவை நூற்றுக்கணக்கான சிறுகதை களுக்கான தரவுகளை தனக்குள் ஒளித்து வைத்து நம்மை பிரமிக்க வைக்கிறது. புதினத்தை படிக்கும் பொது நமக்கு வேறு எண்ணங்களே நினைவுக்கு வராமல் மயங்கிக் கிடக்க வைக்கிறது. அந்தளவுக்கு உள்ளிழுத்துக் கொள்கிறது.
"புயலிலே ஒரு தோணி" தமிழின் தலைசிறந்த முதல் பத்து புதினங்களின் ஒன்று இதில் இருக்கும் யாருக்கும் மாற்றுக கருத்து இருக்க முடியாது.
No product review yet. Be the first to review this product.