ராத்திரி நீண்ட நேரம் தூங்கவில்லை, ஓவியா என்கிற அற்புதமான பெண் என்கிற குறியீட்டை எண்ணியெண்ணி நெகிழ்ந்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் நாவலில் வருகிற பூங்குழலியை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஓவியாவைப் புரிந்து கொள்ள முடியும். நள்ளிரவில் கருங்கடலில் ஓடம் ஒட்டியபடி அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சம் தான் விம்முவதேன்? என்று சோகப்பாட்டுப் பாடிய பூங்குழலிக்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம்? அங்கும் காதல், இங்கும் நிறைவேறாக் காதல், அவளுக்கும் தனிமை, இவளுக்கும் தனிமை, அவளுக்கு கடல், இவளுக்கு நீச்சல் குளம். அவளுக்குக் கடல் அலைகள், இவளுக்கு நீரில் உள்ள நீர்ப்பூச்சிகள்.
அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தை மனம், அந்தத் தனிமையில் தன்னோடு துணைக்கு இருந்த தண்ணீர்ப் பூச்சிகளைப் பார்த்து நன்றி சொல்லிற்று. ஆஹா, என்று மனம் உருக அரற்றினேன். இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்று ஏங்கினேன்.
நன்றி குணசேகர், உங்களின் அபரிமிதமான புரிதலுக்கு பெண்குலத்தின் சார்பாக நன்றி.
- எழுத்தாளர் இந்துமதி.
No product review yet. Be the first to review this product.