குமரப்பாவின் காலத்தில் முதலாளியம், சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடைமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால், இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ள வில்லை. நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம், எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வாகிவிடும் என்று கருதப்பட்டது. அதாவது பொருள் ஆக்கத்தில், முதலீடு +மூலப் பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால், வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. அத்துடன் " பொருள் ஆக்க முறை " பற்றியும் அவர்கள் கவலைப்பட வில்லை. ஆனால், குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பது அரிது என்றும், பெருமளவு பொருளாக்கம் தவறு என்றும், பெரும்பாண்மை மக்களால் தான் பொருளாக்கம் நடைபெற வேண்டும் என்றார் அவர்.
- பாமயன்