இசைக்கு புதிய முகவரி கொடுத்தவர் எம் எஸ் சுப்புலட்சுமி. அவர் ஒரு தனி இயக்கமாகவே விளங்கினார். தமிழகத்தில் வீடுதோறும், தெருக்கள் தோறும், குறைந்தபட்ச புரிதல் மட்டுமே இருந்தவர்களையும் இசையை நோக்கி செவிமடுக்கக் செய்தவர். தமிழிசை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு, அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும் எதிர்கொண்டார். அதேநேரத்தில் சஸ்கிருதமயமாதலின் மிகப்பெரிய உந்து சக்தியாகவும் அவர் விளங்கினார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னை முழுக்க முழுக்க பிராமணியத்திடம் ஒப்படைத்தார். அது அவருக்கு வசதியாக இருந்தது. சுப்ரபாதத்தையும் விஷுனுசஹஸ்ர நாமத்தையும் தமிழர்களின் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக நுழைந்தது அவருடைய குரல்.
No product review yet. Be the first to review this product.