தோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வையுடன் கூடிய கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ளார். எவரெல்லாம் குற்றவாளிகளோ அவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் தோலுரிக்கிறார். இந்த சத்திய ஆவேசம்தான் அவர் உடல் முழுதும் முளைத்திருக்கும் தழும்புகளுக்கு அடிப்படை. ஆழமான சமூகப்பார்வையும் மார்க்சிய நோக்கிலான வரலாற்றுணர்வும் கொண்டு, ஆழ்ந்த மன ஈடுபாட்டுடன் போராட்டங்களில் தன்னை இழந்து பங்கேற்பது எனப் பயணிக்கும் தோழர் செல்வாவின் எழுத்துப் பயணம் இந்நூலின் மூலம் தொடங்குவதாகக் கொள்ளலாம். களப்போராளிகள் கடந்த காலங்களில் எழுதாமல் போனதால் நமக்கேதோ பெரிய வரலாறு இல்லை என்பதான தோற்றம் இன்றுள்ளது.அதை உடைத்தெறிய இதுபோன்ற படைப்புகள் நிச்சயம் உதவும்
தோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வையுடன் கூடிய கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ளார். எவரெல்லாம் குற்றவாளிகளோ அவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் தோலுரிக்கிறார். இந்த சத்திய ஆவேசம்தான் அவர் உடல் முழுதும் முளைத்திருக்கும் தழும்புகளுக்கு அடிப்படை. ஆழமான சமூகப்பார்வையும் மார்க்சிய நோக்கிலான வரலாற்றுணர்வும் கொண்டு, ஆழ்ந்த மன ஈடுபாட்டுடன் போராட்டங்களில் தன்னை இழந்து பங்கேற்பது எனப் பயணிக்கும் தோழர் செல்வாவின் எழுத்துப் பயணம் இந்நூலின் மூலம் தொடங்குவதாகக் கொள்ளலாம். களப்போராளிகள் கடந்த காலங்களில் எழுதாமல் போனதால் நமக்கேதோ பெரிய வரலாறு இல்லை என்பதான தோற்றம் இன்றுள்ளது.அதை உடைத்தெறிய இதுபோன்ற படைப்புகள் நிச்சயம் உதவும்
× The product has been added to your shopping cart.