இன்று இந்தியாவை துன்புறுத்தும் பயங்கரமான அரசியல் சமூகப் பிளவுகளுடைய தோற்றுவாய் எது? அனைத்து அரசியல் சித்தாந்தங்களும் கட்சிகளும் தங்களுடைய கவர்ந்திழுக்கும் சக்தியை ஏன் இழந்திருக்கின்றன?
சாதிய சமூக கட்டமைப்பில் முதலாளித்துவம் எவ்வாறு ஒரு வரலாற்று நாகரிகப் பெயர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் இந்திய முதலாளித்துவம் சாதியத்தால் எவ்வாறு உருகுலைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த நாகரீகப் பெயர்வு எவ்வாறு தன்னுடைய முற்போக்கு பாத்திரத்தை இப்பொழுது முற்றிலுமாக இழந்து வெறுமையாக நிற்கிறது என்பதை விளங்குவதுடன் ஒன்றன் பின் ஒன்றாக எவ்வாறு குழப்பத்தை தோற்றுவிக்கிறது என்பதையும் விளக்குகிறது. இந்துத்துவவாதிகள் நேருவிய வழியை எதிர்த்து அறைகூவல் விடுக்கும் மையக்களத்துக்கு எவ்வெஆறு வந்தார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவும் சமூக அரசியல் பின்புலத்தையும் எடுத்துரைக்கிறது.
உலகமயமாக்கலின் அவலங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இரண்டாவது நாகரீகப் பெயர்வு முற்றிலுமாக தேவைப் படுகின்றது என்பதையும், நோட்டை எதிர்நோக்கியுள்ள குழப்பம் இதனால் தீர்த்து வைக்கப்படும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
No product review yet. Be the first to review this product.