அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. 'மகனே, கைப்பிடியளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை. இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை. பிணி இல்லை. மூப்பு இல்லை. எனவே மரணமில்லை. இந்தக் கைப்பிடியளவு கதைகளால் உன்னுள் ஒரு காட்டையும் ஒரு கடலையும் ஆக்கிக் கொள். காடு உனது அகவுலகின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கடல் உனது புறவுலகின் புதிய நிலங்களையும் அவற்றின் மனிதர்களையும் அறிமுகம் செய்யும் நீ வளர வளர காடும் கடலும் வளரும் கட்டிலுள்ள எறும்பு முதல் யானைவரை அனைத்தையும் உனது முகச் சாயலில் வரைந்தும் வடித்தும் வைத்துக்கொள். உனக்கு இடும்பை இல்லை. கடல்வழி விரியும் நில மக்களுக்கு முன் ஒரு நிலைக்கண்ணாடியாய் நில். உனக்கு எதிரி இல்லை. தூங்கு மகனே தூங்கு. தூக்கம் கனவுகளின் விளைநிலம். கனவுகள் உனக்கு நான் சொல்லாதக் கதைகளைச் சொல்லும்'.
No product review yet. Be the first to review this product.