ஈழப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களும், வெவ்வேறு வரலாறுகளும் முன் வைக்கக் கூடிய காலகட்டமிது. இதற்கான பெரும் விலையையும் பேரிழப்புகளையும் தந்துவிட்டே, மனித சமூகத்தின் இந்த அடிப்படை உரிமையை, தமிழ்ச் சமூகத்தினுள் மாற்றுக் கருத்ததாளர்கள் பெற்றிருக்க கூடிய சூழலில், புஸ்பராணியின் ஈழப் போராட்டத்தில் தனது பங்களிப்புகளின் நினைவுப் பகிர்மானங்கள், ஒரு பகுதி வரலாறாக நமது கவனத்தை ஈர்க்கின்றன. போரின் தீவிரமும் ஒடுக்குமுறைகளும், போரில் பங்கேற்ற பெண்கள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களையும் இன்று ஈழத்திலும், புலம் பெயர் சூழலிலும் சிறந்த படைப்பாளிகளாகவும், இலக்கிய ஆளுமைகளாகவும் உருவாக்கிய போதிலும், வரலாற்றை எழுதும் போக்கிலிருந்து விலக்கியே வைத்துள்ளது என்கிற குறைபாடுகளை களையும் துவக்கப் புள்ளியாக புஸ்பராணியின் 'பெண்பாடு'களின் அனுபவப்பிரதி.