இன்றைய, தினம் நான் உங்களிடம் கேட்க விரும்புவது . தாய்மார்களைக் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல்செய்தேன் என்று சொல்கிறார்களா? இந்திராகாந்தி அம்மையார் இரண்டு நாட்கள் தமிழ்நாட்டைச் சுற்றினார்கள். ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஆதாரம் இல்லாத காரணத்தால்! நீதியில் குறிக்கிட்டதாகச் சொல்கிறார்களா? இல்லை! நிர்வாகத்தில் தலையிட்டேனா? இல்லை! என் நண்பர்களுக்கு ஏதாவது சலுகை செய்து பதவி வாங்கிக் கொடுத்தேனா? இல்லை! நிர்வாகத்தில் தலையிட்டேனா? இல்லை! என் நண்பர்களுக்கு ஏதாவது சலுகை செய்து பதவி வாங்கிக் கொடுத்தேனா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரிசபையை நீங்கள் தேர்ந்தெடுத்து வாக்களித்தீர்களே, அந்த மன்றத்தை ஏன் கலைத்தார்கள்?
காரணம் இருந்து, நான் குற்றவாளி என்று சந்தேகித்து, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்ற நிலையில் குற்றம் இருந்து, அவர்களுக்கு புகார் இருந்து, ஆதாரம் இருந்து, கிடைத்திருந்தால் நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன். மீண்டும், மீண்டும் சொல்லிக் கொள்ளுகிறேன். நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.
-எம்.ஜி.ஆர்.
No product review yet. Be the first to review this product.