எனது அருமை நாஸ்தென்கா! தெய்வமேதான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இதை எனக்கு எடுத்துரைத்து என்னைத் தெளிவு பெறச் செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இப்பொழுது இங்கு உன் பக்கத்தில் அமர்ந்து உன்னுடன் பேசும் பாக்கியம் பெற்றுள்ளபடியால் நான் வருங்காலம் குறித்து நினைக்கவே அஞ்சுகிறேன். ஏனெனில் மீண்டும் தனிமையைத் தவிர, நாற்றமெடுக்கும் அந்த அர்த்தமற்ற வாழ்க்கையைத் தவிர வருங்காலம் எனக்குத் தரக்கூடியது எதுவும் இல்லை. கனவல்லாமல் நனவிலே உன் அருகே இருந்து இத்தனை இன்பம் பெற்றுள்ளேன்.
No product review yet. Be the first to review this product.