திரைப்படப் பாடல்கள் செவிக்கும் மனதிற்கும் விருந்தாய் அமைவதால் அப்பாடல்களுக்கு அடிப்படையான இலக்கியத் தொடர்களை எடுத்துக்காட்டினால் இலக்கிய ஆர்வலர் வரவேற்றுப் பயனடைவர் என்ற நோக்கில் இலக்கியப் படைப்பாளர் பேராசிரியை பானுமதி ரமேஷ் அவர்கள் "வெள்ளித்திரையில் மின்னும் இலக்கியம்" என்ற நூலைப் படைத்துள்ளார்.
மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களையும் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், பண்பாடு போன்றவை குறித்தும் பாடப்பட்டுள்ள சிறப்பான, வரவேற்கத்தக்க, நல்வழிகாட்டக்கூடிய திரைப்பாடல்களை நூலாசிரியர் தேர்வு செய்து அவை, பாடல் ஆசிரியர்களால் எவ்வெவ்விலக்கியங்களிலிருந்து கையாளப்பட்டுள்ளன என்பதைச் சிறப்பாகப் பொருத்திக் காட்டி விளக்கியுள்ளார்.
No product review yet. Be the first to review this product.