யதார்த்தக் கதைகள் என்ன செய்யும்? அவை அவற்றைப் பற்றியே அலுத்துக்கொண்டு வேறு வகைக் கதைகளுக்கு வழிவிட்டு நிற்கும். பல்வேறு தளங்களில் இயங்கிப்பார்க்கும் ஆர்வம் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு எழுவது இயல்புதானே. தனது பாணி என்ற ஒன்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் வரை அலைக்கழிப்புக்கு உள்ளாவதும் இயல்பானது. ஆனால், ஒருவர் தன்னுடைய பாணியைக் கண்டடைந்துவிட்டால் தனது படைப்புகளையே நகலெடுப்பவராக மாறிவிடுகிறார்; அதுவும் மை தீர்ந்துபோன நகல் இயந்திரத்தில் எடுப்பவராக. தவிர்க்கவே முடியாத அந்த விபத்தை முடிந்தவரை தள்ளிப்போடும் வரை எழுத்து உயிர்ப்போடிருக்கும் சாத்தியம் அதிகம்.
No product review yet. Be the first to review this product.