“தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்,தற்பெருமை பேசாமல் ஆலமரமாக நின்று கலையுலகில் பலரையும் அரவணைத்து,நிழல் கொடுத்து நிறைவாக வாழ்ந்த பஞ்சு அண்ணனுக்கு ‘திரைத்தொண்டர்’ என விகடன் சூட்டிய தலைப்பு,எவ்வளவு பொருத்தம்!
ஒவ்வொரு படத்துக்கும் அவர் எப்படி உழைத்தார்,எப்படி விநியோகம் செய்ய என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டார் என்பதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘அன்னக்கிளி’ படம் வெளியாகி, அசுர வெற்றிபெற்றது.வெளியிட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழா போல மக்கள் கூடி வரவேற்ற பிறகு, ஒருநாள் பஞ்சு அண்ணன் வெள்ளித்தட்டு ஒன்றை வாங்கி அதில் புது வேட்டி-சட்டை,புடவை வைத்து அதன் மீது ரூ.25000 மொத்த சம்பளத்தையும் வைத்து வீட்டில் வந்து கொடுத்தபோது,எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை, கோடி சம்பளம் வாங்கும் என் மகன்கள் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!”
-சிவகுமார்
No product review yet. Be the first to review this product.