‘ ஐயர் பதிப்பு ‘ என்று கொண்டாடதக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தனனத் நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினர் என்பதற்குச் சான்றான அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப்படுத்தும் அவரின் சுவையான உரையாடல்கள் எவர் ஒருவரும் கொண்டாடத் கூடியவை. உணர்ச்சிக் போக்கும் உரையாடல் போக்கும் கலந்த நாடகத் தன்மையுடன் கூடிய விவரிப்பு நடையை அவரது எழுத்துகளில் காணலாம். நேரிடையாகத் தெளிவான மொழியில் எவ்வித அலங்காரமின்றி இக்கட்டுரைகள் எழுதபட்டுள்ளன. அவர் காலச்சூழலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் அறிய முடிவதோடு இன்றும் வாசிப்புத்தன்மை கொண்டு வசிகரிப்பன இக்கட்டுரைகள். 1901இல் ‘சுதேசமித்ர’ னில் தொடங்கிப் பின்பு தென்னிந்திய ‘வர்த்தமானி’ ‘கலைமகள்’ ‘ஆனந்த விகடன்’ ‘தினமணி’ ‘தாருல் இஸ்லாம்’ எனப் பல்வேறு பத்திரிகைகளில் கிளை பரப்பியது அவரது எழுத்தாற்றல். வெகசன ஊடகம் சார்ந்து வெற்றி பெற்ற கட்டுரைகள் இவை.
No product review yet. Be the first to review this product.