திரைப்படம் நல்ல பல கருத்துகளை நாட்டு மக்களுக்கு சொல்லி அதன் வாயிலாக திரைப்பட ரசிகர்கள் மேன்மையடைவர் என்னும் நோக்கத்தில் சுதந்திர,புராண,கர்ணபரம்பரைக் கதைகளை தொடர்ந்து சமுதாய விழிப்புணர்வு கருத்தினை வலியுறுத்தும் படங்களும் தயாரிக்கப் பட்டன.அப்படி உருவான திரைப்படங்களில் என்றென்றும் நம்நினைவில் நிற்கும் படங்களை பற்றிய கட்டுரைகள்,பிரபல எழுத்தாளர்,திரைப்பட விமர்சகர் ‘திரையோகி’ அவர்களால் தொகுத்து எழுதப்பட்டு ‘பொம்மை’ இதழ்களில் ‘சரித்திரம் படைத்த திரைப்படங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்து வாசகர்களின் படையுலகினரின் பாராட்டை பெற்றன.அந்த படங்களை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து மகிழவே சரித்திரம் படைத்த திரைப்படங்கள் என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டது.1934-1949ஆம் ஆண்டு வரையில் வெளியான தமிழ்படங்களில் சென்னையில் தயாரான முதல் தமிழ்படம்’ஸ்ரீனிவாச கல்யாணம் (1934)’ அறிஞர் அண்ணா அவர்களின் ‘வேலைக்காரி’(1949) உட்பட “திரையோகி” எழுதிய பதினெட்டு திரைப்படங்கள் பற்றியா வியத்தகு செய்திகள் அழகிய புகைப்படங்களுடன் இந்நூலில் அணிவகுக்கின்றன.
No product review yet. Be the first to review this product.