''ஏம்பா, இத்தனை பேரு எங்கதை இலாகாவுல இருக்கீங்க..
என் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரக்கூடாதா?'
தன்னுடைய கதை இலாகாவைச் சேர்ந்தவர்களிடம் தேவர் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதற்கான நேர்மையான பதில் தான் பா.தீனதயாளன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்!
எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்க முடியுமா? என்று பெரிய தயாரிப்பாளர்களே ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆரே தேவரைத் தேடிச் சென்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது தேவரின் உயரத்துக்கு ஒரு சாட்சியம். உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமே தேவரால் வெற்றி பெற முடியும் என்று கோடம்பாக்கம் வாய் பேசியது. அப்போது வாய் பேசா மிருகங்களை வைத்து வெற்றிப் படமெடுத்து அதிசயம் நிகழ்த்தியவர் தேவர்.
சரம் தொடுத்தது போன்று வெற்றிகளை ருசித்த தேவரின் வாழ்க்கையில் சறுக்கல்களுக்கும் இடம் இருக்கிறது. அவருடைய வெற்றியில் இருப்பது போலவே அவருடைய சறுக்கல்களிலும் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் தேவரின் பங்களிப்பு ஒரு தனி அத்தியாயம். அந்த அத்தியாயத்தை துல்லியமான தகவல்களாலும் துள்ளும் எழுத்து நடையாலும் வெகு நேர்த்தியாகச் செதுக்கியிருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன்.
No product review yet. Be the first to review this product.