திரைப்படங்களைச் சாட்சியமாக வைத்து ஈழத் தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ளும் முயற்சியை யமுனா ராஜேந்திரனின் புத்தனின் பெயரால் நூல் மேற்கொள்கிறது. ஈழச்சமூகத்தையும், அதன் வழி ஈழமக்களையும், சிங்கள மக்களையும் அவர்களுக்கிடையிலான முரண்களையும் நேசத்தையும் வெறுப்பையும் துயர்களையும் புரிந்துகொள்ள முனைந்ததாகவே இந்த நூலின் பயணம் இருக்கிறது. ஈழச்சமூகம் குறித்து வரலாற்று நூல்களின் வழி நாம் அடைந்த புரிதலை விடவும் ஆழமான புரிதலை இந்தத் திரைப்படங்கள் நமக்கு அளிக்கின்றன. வரலாறு எதனது சாட்சியாகவேனும் இருக்கிறதா என்பதில் நிச்சயமில்லை என்றாலும், இலக்கியம் போலவே திரைப்படமும் வரலாற்றின் சாட்சியமாக இருக்கிறது என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்லமுடியும்.
No product review yet. Be the first to review this product.