ஒருத்தி நூற்றியிருபது வருடங்களுக்கு முந்தைய காலத்தில் நிகழ்கிறது. அன்றைய காலத்தில் தமிழகத்தில் பேச்சு வழக்கு எவ்வாறு இருந்தது என்பதை அறியச் சான்றுகள் இல்லை. அனால் ஆங்கிலப் பரிச்சயம் இல்லாதவரை கிராமங்களில் புழக்கத்தில் இருந்த தமிழ் மாறாத தன்மைகளைக் கொண்டிருந்தது என அனுமானிப்பது தவறாகாது. எனவே ஒருத்தி பட வசனங்களைக் கரிசல் பூமியில் வாழும் ஏட்டுக் கல்வி பெறாத மக்களின் பேச்சுவழக்கையொட்டி எழுதினேன். படப்பிடிப்பில் பெரும்பகுதி அப்பகுதி மக்கள் மத்தியிலேயே நடைபெற்றதால் அந்த வசனங்கள் அவர்களுடைய ஒப்புதல் பெற்ற பிறகே நடிகர்களால் பேசப்பட்டன.
No product review yet. Be the first to review this product.