காகிதத்திற்கும் திரைக்கும் இடையில் கேமரா இருக்கிறது. இந்தக் கேமராவை எப்படிக் கையாள வேண்டும்?வார்த்தைகள் உருவாக்கும் சித்திரங்களை,திரையில் அதனினும் மேலான உணர்வுள்ள காட்சியாக மொழிமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?உதாரணத்திற்கு பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையைப் படித்துவிட்டு,அந்தப் படத்தைப் பாருங்கள்.வார்த்தைகள் எப்படி அதிசயக்க வைக்கும் காட்சிகளாக மாறுகின்றன என்பது புரியும்.
காட்சியாக மாற்றும்போது ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ன செய்கிறார்?இயக்குனருக்கும் அவருக்குமான புரிதல் என்ன?எழுதப்பட்ட காட்சி ஒரு நாளின் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் ? ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு ஓவியங்கள் எப்படி உதவி செய்யும்? ஒரு சட்டகத்தை வடிவமைப்பது (Composition) என்றால் என்ன?வண்ணங்கள் ஒரு காட்சியின் தன்மையை எப்படி மாற்றுகின்றன?கேமரா நகர்வு என்றால் எப்படி இருக்கவேண்டும்?
ஒளிப்பதிவாளர்கள் மட்டுமல்ல திரைப்படத்தின் சகல துறையில் இருப்பவர்களுக்கும் பயன்படக்கூடிய இந்த அற்புதமான நூலில் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் இருக்கின்றன.
-செழியன்.
No product review yet. Be the first to review this product.