உலகின் மிக முக்கியமான சினிமாக்களை முன்வைத்து,அதன் தொழில்நுட்பம்,சினிமா ரசனையை வளர்ப்பதில் அதன் பங்கு,சினிமாவைக் காட்சி ஊடகமாக வார்த்தெடுப்பதில் இந்த படங்களின் பங்களிப்பு என்ன போன்ற பல்வேறு விசயங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்புதான்,நாடு கடந்த கலை.காட்சிக ளின் மூலம் கதை சொல்லும் உத்தியையும்,அதற்கு தேவையான படத்தொகுப்பு,ஒளிப்பதிவு போன்ற பல்வேறு உப தொழில்நுட்பங்களை பற்றியும் இந்த கட்டுரைகள் நம்மோடு விரிவாக பேசுகிறது.சினிமாக்களுக்கு சப்தம் அதாவது ஒலியமைப்பு எத்துணை முக்கியமானது என்பதையும் இந்த கட்டுரைகள் விளக்கி செல்கிறது.
சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்று சொல்லிவிட்டு கட்டுரைகளோடு மட்டும் இந்த புத்தகம் நின்றுவிடவில்லை.மாறாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களை இணையத்தில் காண்பதற்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது.சினிமா என்பது என்ன?அது யாருக்காக? அது எப்படி கலையாக மாறுகிறது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,ஒரு சுய விசாரணையை இந்த புத்தகம் கோரி நிற்கிறது.
No product review yet. Be the first to review this product.