இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் நம் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றன.கட்டுரைகளில் இடம்பெறும் கதாநாயகர்கள் சினிமா மழை பெய்ய ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்க நனைகிறார்கள்.தும்முகிறார்கள்.தும்மலில் வெளிப்படும் பாவனைகளே அவர்களின் வாழ்வின் சாலையாகவும் ஒரு வழிப்பாதையாகவும், முட்டுச் சந்தாகவும் இருந்திருக்கின்றன.அந்தப் பாவனைகளின் அழகை மகிழ்ச்சியை தவறுதலை,இழப்பை,கண்ணீரை அதன் உயிர்ப்பு குறையாமல் இந்நூலின் ஆசிரியர் வாசகர்களுக்கு பந்தி வைத்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.