மாடர்ன் தியேட்டர்ஸ்-தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த முதல் நிறுவனம்,முதல் மலையாளப்படத்தையும்,முதல் ஆங்கிலப்படத்தையும்,முதல் சிங்களப்படத்தையும் உருவாக்கிய நிறுவனம்.தமிழில் முழுநீள வண்ணப்படத்தை தயாரித்த பெருமைக்குரிய நிறுவனம்.
-இப்படி பல ’முதல்’ சிறப்புக்களை மட்டுமல்ல;கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள்,நடிக-நடிகையர் என பலதரப்பட்ட கலைஞர்களையும் ஒருங்கிணைத்து..தொடர்ந்து 45வருடங்கள் (1937 –ஆம் ஆண்டு முதல் 1982-ஆம் ஆண்டு வரையில்) திரைப்படங்களை தயாரித்து,சாதிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரால் எப்படி முடிந்தது?
படத்தொழிலில் சாதனைகளை புரிந்த ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ அதிபர் டி.ஆர்.சுந்தரம்,அவர்தம் புதல்வர் சு.ராமசுந்தரம்(ஆர்.சுந்தரம்) அவர்களின் நிர்வாகத் திறனை, வரலாற்றுப் பதிவை,இந்த நூலில் பிரபல மூத்த எழுத்தாளர் சேலம் ‘தமிழ் வாகைச்செம்மல்’ ரா.வேங்கடசாமி சுவைபட எழுதியுள்ளார்.திரைப்பட வரலாற்று வழிகாட்டி இந்த நூல்..
-திரையோகி
No product review yet. Be the first to review this product.