ஒரு நெடிய காலகட்டம் திரைப்படங்கள் தயாரிக்கத் தொடங்கி ஒரு நூற்றாண்டும் கூடவே முப்பது வருடங்களும் கடந்து விட்டன.இந்த நெடும்பாதையில் அபூர்வமாகத்தான் பெண்களின் குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.தனித்த குரலாக இருப்பதாலேயே,வெகு அழுத்தமாகவும் உறுதியாகவும் அமையப் பெற்றிருக்கின்றன.பாதை என்ற ஒன்றில்லாமல் வனம் முழுவதும் அலைந்துவிட்டு மீண்டும் ,வனத்தின் வெளியே நின்று உள்ளே பார்ப்பது போன்றதான உணர்வே, இந்தக் கட்டுரைகளை ஒருசேர இப்போது வாசிக்கிறபோது. ஏற்ப்பட்டது. இப்புத்தகத்தை வாசிப்பது மூலமாக பெண் இயக்குனர்களின் இலக்கு படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதாக உணரப்படுகிறது.அது சக மனிதர்களின் மீதான கருணை.பெண் இயக்குனர்கள் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை இப்புத்தகம் உருவாக்கும்.
No product review yet. Be the first to review this product.