எம்.ஜி.ஆர் அவர்களுடன் பழகி,அவரது சிறப்பியல்புகளை கண்டு மகிழ்ந்தவர்களில்,புகழுடம்பை எய்திய பேரறிஞர் அண்ணா முதல் இயக்குனர் கே.சங்கர் வரை பலரும்,தங்கள் எண்ணப் பேழையில் நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர். என்னும் ஒளி முத்தை, வண்ணமயமாக்கி காட்டுகிறார்கள் இந்தநூலில்,திரு.நாகை தருமன் அவர்கள் சிதறாத மாமணியாக,சிந்தாத மன மலராக அழகாகத் தொகுத்து ‘மாமனிதர் எம்.ஜி.ஆர்’ எனும் நல்ல தலைப்பில் இந்த நூலை வழங்குகிறார்.இன்றைய நாளில்,ஒருவரை ஒருவர் உள்ளம் திறந்து பாராட்டி மகிழ்வது என்பது அரியகலையாக ஓய்துவரும் வேளையில் “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! என்பதற்கு உதாரணமாக மாமனிதராக ஒளிர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் பலரது பாராட்டுகளையும் அவர் எளிதாக சம்பாதித்தார்.வாசகர்களுக்கும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களுக்கும் இந்நூல் பல புது தகவல்களை தரும்.
No product review yet. Be the first to review this product.