இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களாகப் பிறக்காவிட்டலும் ,உணர்ச்சியிலும் கருத்திலும் ஒன்று பட்டவர்கள்.இவர்கள் என்றுமே பிரிந்தது கிடையாது .கிருஷ்ணனும் பஞ்சுவும் ஒருவரையொருவர் சந்தித்து 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில்,சந்தித்த இடம் கோவை பிரீமியர் ஸ்டுடியோ .அன்று அவர்களைப் பிணைத்த பாசம் கடைசிவரையில் பிரியவே இல்லை,இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் “பூம்பாவை”.டைரக்ஷன்-கிருஷ்ணன் பஞ்சு “என்று பெயரை தாங்கி வந்த முதல்படம் –நல்ல தம்பி.தமிழ் ,தெலுங்கு,கன்னடம்,இந்தி,மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சிறந்த திரைப்பட இயக்குனர்களாக விளங்கினர்.தாங்கள் இயக்கம் படங்களில் முன்னேற்ற கருத்துகளை புகுத்த வேண்டும் புதுமுகங்களை அறிமுகபடுத்த வேண்டும் என்பதையே இவர்கள் கொள்கையாக கொண்டிருந்தனர்.”பேசும்படம்” இதழில் இயக்குனர் பஞ்சு,நட்சத்திர நடிகர்களுடன் தமக்கேற்ப்பட்ட அனுபவங்களை தொடராக எழுத,மூத்த பத்திரிக்கையாளர் நாகை தருமன் அவர்களால் அது தொக்குக்கபட்டு புத்தகமாக வெளிவந்தது.
No product review yet. Be the first to review this product.