கே.பாலசந்தர்- வேலை,டிராமா, சினிமா (37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு)
திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் கே. பாலச்சந்தரிடம் நேரடியாக பேசி கேட்டு வாங்கிய நினைவுப் பகிர்தல்களை சுவை குன்றாமல், உணர்வுப்பூர்வமான பதிவு செய்திருக்கிறார்.
பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறை மீது பாலசந்தருக்கு இருந்த ஈடுபாடு, கல்லூரியில் படித்தபோது இந்தியா விடுதலையடைந்தது, அந்நாளை துக்க நாள் என்று பெரியார் அறிவிக்க கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், இவர் நாடகங்களை மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஒளவை சண்முகம், மெய்யப்ப செட்டியார் முதலிய பிரபலங்கள் பாராட்டியது, எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக்கொண்டு தவித்தது, இவரது ஒரு நாடகத்தில் அன்று பிரபல சினிமா நடிகராக இருந்த நாகேஷ் ஒரே ஒரு காட்சியில் விரும்பி நடித்தது - இப்படி ஏராளமான சுவையான தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (தினமணி)
No product review yet. Be the first to review this product.