தமிழ் திரைப்பட உலகில் ஒரு சகாப்தத்தை உருவாக்கியவர் கலைவாணர்.திரைப்படவுலகில் ஒரு நடிகராக இருந்த கலைவாணர் கலை துறையினருக்கும்,மக்களுக்கும் வாழும் வழியை உபதேசித்தார்.ஒரு தனி நபராக இருந்த அவர் ஒரு மாபெரும் நிறுவனமாக செயல்பட்டார்.துன்பத்தின் சாயலே உலகின் மீது படக்கூடாது என்று விரும்பியவர் அதனால் கவலையை மறந்து சிரிக்க செய்தார்.போக போக கலையின் மூலம் கல்விப் பயிற்சி கொடுத்தார். அவர் எடுத்துக்கூறிய தத்துவங்கள் கணக்கில் அடங்கா.இன்றுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ,எதிர்காலத்திலுள்ளவர்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய விஷயங்களை தம் கற்பனைக் கண்களால் கண்டு “கோடிட்டு” காட்டினார்.கலைவாணர் ஒரு சிரிப்பு நடிகர்,வள்ளல்,தத்துவவாதி,ஆசிரியர்,கலைத்துறையில் எல்லாமாகி நின்றவர்;காந்தியவாதி,தேசபக்தர்,சமூகசேவகர்-ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய தெய்வப்பிறவி அவர்.அவரது வரலாற்றை எல்லோரும் சுவைக்குமாறு எளிய,இனிய நடையில் படைத்துள்ளார் ‘குமுதம்’ வி.செல்லப்பா அவர்கள்.
No product review yet. Be the first to review this product.