நீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற் சிற்பங்களை celluloid-ல் செதுக்கியவர்; பழைய சினிமாவைப் புதுக்கியவர். சத்யஜித்ரேயையும் மிருனாள் சென்னையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.
இயக்கியப் படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர். 'அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான்; இந்த அலெக்சாண்டர் திரையில் வென்றான்!' எனும்படி-எம்மனோர் போற்றும் திரு.மகேந்திரந்தான் என்னை மகா கவிஞன் என விளித்தது. திரு.மகேந்திரனின் இயற்பெயர் திரு.அலெக்சாண்டர்.
-'நினைவு நாடாக்கள்' நூலில் கவிஞர் வாலி
No product review yet. Be the first to review this product.