தமிழ்ப் படம் உலக அரங்கில் பேசப்படவில்லையே, ஏழு கோடி மக்களின் காட்சி ஊடகமாக இருப்பினும் அதை உலகினர் அறியாது இருக்கின்றார்களே என்றெல்லாம் ஆதங்கம் கொள்பவர்களுக்கு ராஜன் இதமளிக்கிறார். தமிழ் சினிமா ஒரு முரட்டுக் குழந்தை என்று வாஞ்சையுடன் குறிப்பிடும் அவர் அதற்கான புதிய விமர்சனக் கோட்பாடுகளையும் அழகியலையும் உருவாக்க 'நாம்' முனையவேண்டும் என்கிறார். அதாவது தான் மட்டுமேயன்றி வாசகர்களுடன் இணைந்து அந்தப் பணியை மேற்கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இந்நூல் எங்கும் விரவியிருப்பதைக் காணமுடியும். தமிழ் சினிமா குறித்தும் தமிழ் சினிமா தொடுபவன குறித்தும் எழுதப்பட்டுள்ள இந்நூல், வாசகர்கள் ஒளி பெறுவதற்கும் விவாதிப்பதற்கும் தருணங்கள் பலவற்றை அளிக்கின்றன..
No product review yet. Be the first to review this product.