“எல்லா பேரிலக்கியமும் சொல்வது இரண்டு கதைகளில் ஒன்று தான்; மனிதன் பயணம் மேர்கொள்ளும் கதை, அல்லது ஊருக்குள் அன்னியன் வரும் கதை.” இது இலக்கியத்தை பற்றிச் சொல்லப்படும் பிரபலமான தேய்வழக்கு. ஒரு வகையில் ‘போயாக்’ சிறுகதை, இரண்டாம் வகை கதை – அதாவது, ஊருக்குள் அன்னியன் வரும் கதை என்ற கதைக்கருவை மறுபரிசீலனை செய்வதாக வாசிக்க முடிகிறது.
ஒரு ஊருக்கு அந்த மண்ணை, பாரம்பரியத்தைச் சாராத ஒரு அன்னியன் வரும் பொழுது இரண்டு சாத்தியங்கள் கதைக்குள் இயல்பாக எழுகின்றன. அவன் அந்த ஊரின் மீது என்ன பாதிப்பை செலுத்துகிறான்? ஊர் அவன் மீது என்ன விதமான பாதிப்பை செலுத்துகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகள் முயங்கும் இடத்தில் கதைக்கான வெவ்வேறு சாத்தியங்கள் திறந்துகொள்கின்றன.
No product review yet. Be the first to review this product.