ஆரம்ப கால தமிழ் சினிமாவின் இரண்டாவது பத்தாண்டுகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகத்தை உலுக்கிய இரண்டாவது உலக யுத்தம் தமிழ் சினிமாவையும் பாதித்துக் கொண்டிருந்தது. பொம்மை பத்திரிகையில் பிரபல எழுத்தாளர் திரு,அறந்தை நாராயணன் எழுதிய கனவு பூமியின்... என்னும் கட்டுரைத் தொடரைப் புத்தகமாக தொகுத்து ‘ஆரம்ப கால தமிழ் சினிமா’(1942-1951) என்னும் தலைப்பில் வெளியிடப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழ் திரை உலகை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாய் வளர..உடல் பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்து பாடுபட்ட அத்தனை கலையுலக மேதைகளுக்கும் ரசிகர் பெருமக்களுக்கும் சமர்பித்து ‘பொம்மை’ தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.
No product review yet. Be the first to review this product.